பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

முடிக்கொத்து நோய்

தாக்குதலின் அறிகுறிகள்:
  • ஆரம்பத்தில், கரும் பச்சைகோடுகள் குறைந்தளவு இலையின் மையநரம்புபகுதி மற்றும் இலைதண்டு நரம்புகளில் தோன்றும்.
  • அடர்பச்சை, இலை நரம்புகள் கொக்கிபோன்ற விரிவுகளும் மற்றும் மையநரம்பு, இலைஅலகுக்கு இடையே -வெளிர் பச்சை நிறம் மண்டலத்தில் காணலாம்.
  • முதிர்ந்த தாவரங்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, புதிய இலைகள் சாதாரணதை விட குறுகலானதாக இருக்கும் மற்றும் மஞ்சள்நிறமாக இலையில் ஓரங்களில் காணப்படும்.
  • கடுமையாக பாதிக்கப்பட்ட வாழைகளில் பொதுவாக தார்கள் பழுக்காது, பழங்கல் ஒழுங்கற்று கானப்படும்.
  • வைரஸ்அசுவினி பூச்சி மூலம் பரவுகிறது. வைரஸ் முதன்மையாக பாதிக்கப்பட்ட உறிஞ்சிகள் மூலம் பரவுகிறது.
       
  கரும் பச்சைகோடுகள   இலைகள் குறுகலானதாக இருக்கும்    

கட்டுப்படுத்தும் முறை:

  • வைரஸ் பரவாத கன்றுகளை நடவுக்கு யன்படுத்தவேண்டும்.
  • பாதிக்கப்பட்ட வாழையை நீக்கம் செய்தல் வேண்டும்.
  • கன்றுகள் நட்ட 3 வதுமாதத்தில் 45 நாட்களிலிருந்து பூக்கும் தருவாய் வரை மோனோகுரோட்டோபாஸ் 4 மில்லியை வாழையில் இட்டு கட்டுப்படுத்தலாம்
  • பாஸ்போமிடான் 1 மி.லி / லிட்டர்அல்லது மிதைல்டெமட்டான் 2 மி.லி / லிட்டர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மிலி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015